search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மண்டைக்காடு அருகே 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    மண்டைக்காடு அருகே டியூசனுக்கு செல்ல விரும்பமில்லாததால் 7-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணவாளக்குறிச்சி:

    மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்.  கட்டிட தொழிலாளி. கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ராஜேஷ் குமாரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவரது மகள் தனுஷியா (வயது 13)  அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளியில் சமீபத்தில் நடந்த தேர்வில் தனுஷியா  குறைந்த மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்த மாணவியை உறவினர்கள் டியூசனுக்கு செல்லுமாறு  கூறினர். இதனை விரும்பாத மாணவி தனுஷியா, வீட்டில் யாரும் இல்லாத  நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி உறவினர்கள் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராஜ், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி  வைத்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×