என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புல் அறுக்க சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்14 Jan 2020 10:59 AM GMT (Updated: 14 Jan 2020 10:59 AM GMT)
இரணியல் அருகே புல் அறுக்க சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் 2 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
இரணியல் கண்டன்விளை பகுதியை சேர்ந்தவர் மரிய ஜெருசேலன். இவரது மனைவி மரிய அந்தோணி (வயது 75).
இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து பறம்புக்கரை பகுதியில் புல் அறுக்க நடந்து சென்றுகொண்டிருந்தார். பறம்புக்கரை அருகே அவர் சென்ற போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மரிய அந்தோணி அருகே வந்த போது அவரிடம் பேச்சுக் கொடுத்தார்.
திடீரென்று அந்த வாலிபர் மரிய அந்தோணியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன் மரிய அந்தோணியின் கையை தட்டிவிட்டுவிட்டு அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மரிய அந்தோணி கூறிய அடயாளங்களை கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் கண்டன்விளை பகுதியை சேர்ந்தவர் மரிய ஜெருசேலன். இவரது மனைவி மரிய அந்தோணி (வயது 75).
இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து பறம்புக்கரை பகுதியில் புல் அறுக்க நடந்து சென்றுகொண்டிருந்தார். பறம்புக்கரை அருகே அவர் சென்ற போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மரிய அந்தோணி அருகே வந்த போது அவரிடம் பேச்சுக் கொடுத்தார்.
திடீரென்று அந்த வாலிபர் மரிய அந்தோணியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன் மரிய அந்தோணியின் கையை தட்டிவிட்டுவிட்டு அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மரிய அந்தோணி கூறிய அடயாளங்களை கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X