என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகூரில் பிளஸ்-2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்14 Jan 2020 9:04 AM GMT (Updated: 14 Jan 2020 9:04 AM GMT)
பாகூரில் பிளஸ்-2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
பாகூர் சூர்யா நகரை சேர்ந்தவர் சுந்தரவடிவேலு. இவர் வில்லியனூரில் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அருள்ஜோதி (42). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அருள்ஜோதி கணவரை விட்டு பிரிந்து தனது மகன் ராம்குமார் (19), மகள் தேவிகா (17) ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார்.
மேலும் அருள்ஜோதி பாகூர் மேற்கு வீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். தேவிகா வில்லியனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விடுமுறை நாட்களிலும் தேவிகா தனது தாய்க்கு உதவியாக பேன்சி கடைக்கு வந்து வியாபாரத்தை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றுமாலை கடையில் இருந்து தேவிகா வீட்டுக்கு சென்று விளக்கு போட்டு வருவதாக தாயிடம் கூறிசென்றார். தேவிகா கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த அருள்ஜோதி தனது மகன் ராம்குமாரை வீட்டுக்கு சென்று பார்த்து வரும்படி கூறினார். வெகுநேரமாக மீண்டும் அதன்படி ராம்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியே பார்த்த போது வீட்டு வராண்டாவில் ஊஞ்சல் கொக்கியில் தங்கை தேவிகா சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து தேவிகாவை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தேவிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து தேவிகாவின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாகூர் சூர்யா நகரை சேர்ந்தவர் சுந்தரவடிவேலு. இவர் வில்லியனூரில் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அருள்ஜோதி (42). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அருள்ஜோதி கணவரை விட்டு பிரிந்து தனது மகன் ராம்குமார் (19), மகள் தேவிகா (17) ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார்.
மேலும் அருள்ஜோதி பாகூர் மேற்கு வீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். தேவிகா வில்லியனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விடுமுறை நாட்களிலும் தேவிகா தனது தாய்க்கு உதவியாக பேன்சி கடைக்கு வந்து வியாபாரத்தை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றுமாலை கடையில் இருந்து தேவிகா வீட்டுக்கு சென்று விளக்கு போட்டு வருவதாக தாயிடம் கூறிசென்றார். தேவிகா கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த அருள்ஜோதி தனது மகன் ராம்குமாரை வீட்டுக்கு சென்று பார்த்து வரும்படி கூறினார். வெகுநேரமாக மீண்டும் அதன்படி ராம்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியே பார்த்த போது வீட்டு வராண்டாவில் ஊஞ்சல் கொக்கியில் தங்கை தேவிகா சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து தேவிகாவை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தேவிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து தேவிகாவின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X