search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகை-பணம் பறிப்பு

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை மற்றும் 1,000 ரூபாய் ரொக்கத்தை பறித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள டி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி மலையரசி (வயது 32). சென்னை சென்றிருந்த இவர் பொங்கல் பண்டிகைக்காக பஸ்சில் மதுரைக்கு புறப்பட்டார். அவர் வந்த பஸ் இன்று காலை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்தது. பஸ்சில் இருந்து இறங்கிய மலையரசி அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் நகை-பணம் திருட்டு போயிருந்தது. இது குறித்து அண்ணாநகர் போலீசார் மலையரசி புகார் செய்தார்.

    பஸ் பயணத்தின் போது அவருடன் பயணம் செய்த யாராவது நகை-பணத்தை பறித்தார்களா? அல்லது பஸ் நிலைய கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாராவது நகை-பணத்தை அபேஸ் செய்தார்களா? என்று தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×