search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    செங்கோட்டை அருகே பி.இ. பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    செங்கோட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பி.இ. பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது27). இவர் `பி.இ.' படித்து விட்டு தகுந்த வேலை தேடி வந்தார். இவரது மனைவி சித்த மருத்துவத்தில் எம்.டி. படித்து வந்தார்.

    இந்த நிலையில் சிதம்பரத்துக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு எதிலும் ஈடுபாடு கொள்ள முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மனம் உடைந்த சிதம்பரம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×