search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாங்குநேரி அருகே போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் கைது

    நாங்குநேரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபரை கைது செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ் பெக்டர் மார்க்ரெட் தெரசா மற்றும் போலீசார் மேலபுத்தநேரி பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். 

    அப்போது அந்த வழியாக மூலைக்கரைப்பட்டி காந்திநகர் காலனியை சேர்ந்த சக்திவேல் மகன் கிருஷ்ணகுமார் மது அருந்திவிட்டு, போதையில் சாலையில் அங்கும், இங்குமாக போக்குவரத்திற்கு இடையூறாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×