search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருமணம் ஆகாத வருத்தத்தில் கல்லூரி ஊழியர் தற்கொலை

    ராஜாக்கமங்கலம் அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் கல்லூரி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜாக்கமங்கலம்:

    ராஜாக்கமங்கலம் அனந்த நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 34).

    இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் இவர் தனது தாயாரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார்.

    இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சுரேஷ்பாபு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×