search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த மர்ஜினா (வயது 21). இவருக்கும் அசார் அலி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உள்ளன. அவர்களது பெயர் அஜிதா (6), ரஜிதா(2).

    அசார் அலியை பிரிந்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார் மர்ஜினா.

    2-வது கணவனையும் கடந்த சில வாரங்களுக்கு முன் மர்ஜினா பிரிந்து கடந்த 10 நாட்களாக மூன்றாவதாக அமீது என்பவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்றிரவு இரண்டு குழந்தைகளுடன் மர்ஜினா தூங்கிக்கொண்டு இருந்தார்.

    காலையில் கண் விழித்து பார்த்த போது , ரஜிதாவை காணவில்லை. இது தொடர்பாக மர்ஜினா சென்ட்ரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஆண் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்வது தெரியவந்தது.

    விசாரணையில் 3-வது கணவர் அமீதின் நண்பர் ரஷீத் குழந்தையை கடத்திசென்றது தெரியவந்தது. செல்போன் சிக்னல் உதவியுடன் ரஷீதை ரயில்வே போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணின் 8 மாத ஆண் குழந்தையை மர்மப்பெண் நூதன முறையில் கடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×