search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஏர்வாடி அருகே சாலையில் ரகளை செய்த தொழிலாளி கைது

    ஏர்வாடி அருகே சாலையில் ரகளை செய்த தொழிலாளி மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    களக்காடு:

    ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வேப்பன்குளம் கிழூரில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள அம்மன் கோவில் முன்பு அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி ஊசிக்காட்டான் (வயது 42) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு, அவதூறாக பேசி ரகளை செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×