என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒத்தக்கடை அருகே தனியார் நிறுவன ஊழியர் வாகனம் மோதி பலி
மேலூர்:
மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள வவ்வால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் ஆதிவளவன் (வயது 20). இவர் மேலூரையடுத்த வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இரவு பணிக்காக நேற்று இரவு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார். நெல்லியேந்தல்பட்டி 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டி ருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் ஆதிவளவன் படுகாயமடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றி அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆதிவளவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதிவளவன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் எது என்பதை அறிய தீவிர விசாரணை நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்