என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கங்கைகொண்டானில் முறையான ஆவணம் இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
Byமாலை மலர்11 Jan 2020 8:16 AM GMT (Updated: 11 Jan 2020 8:16 AM GMT)
கங்கைகொண்டானில் முறையான ஆவணம் இன்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கசமாடன்(வயது 23). இவர் அப்பகுதியில் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார்.
இவர் நேற்று கரூரில் இருந்து கங்கைகொண்டானுக்கு லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கசமாடன் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் இருந்ததையடுத்து கசமாடனிடம் அதற்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர்.
ஆனால் மணல் ஏற்றிவந்ததற்கான எந்தவொரு முறையான ஆவணமும் அவரிடம் இல்லாததால் போலீசார் திருட்டு மணல் ஏற்றிவந்ததாக கசமாடன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X