என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்11 Jan 2020 8:14 AM GMT (Updated: 11 Jan 2020 8:14 AM GMT)
நாங்குநேரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு நெடுங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 32), விவசாயி. இவரது மனைவி சுப்புலெட்சுமி (29). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. முத்துவர்சினி (4) என்ற மகளும், பால்சுர்ஜித் (2) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி காலை பரமசிவன் வயலுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி சுப்புலெட்சுமி, மகள் முத்துவர்சினி, மகன் பால்சுர்ஜித் ஆகியோரை காணவில்லை. வீட்டில் இருந்த 9 பவுன் தங்க நகைகளும், ரூ.23 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரமசிவன் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது சுப்புலெட்சுமி மகள், மகனுடன் ஒரு காரில் ஏறி சென்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பரமசிவன் தனது உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி, குழந்தைகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகள், பணம் மற்றும் குழந்தைகளுடன் மாயமான சுப்புலெட்சுமியை தேடி வருகின்றனர்.
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு நெடுங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 32), விவசாயி. இவரது மனைவி சுப்புலெட்சுமி (29). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. முத்துவர்சினி (4) என்ற மகளும், பால்சுர்ஜித் (2) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி காலை பரமசிவன் வயலுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி சுப்புலெட்சுமி, மகள் முத்துவர்சினி, மகன் பால்சுர்ஜித் ஆகியோரை காணவில்லை. வீட்டில் இருந்த 9 பவுன் தங்க நகைகளும், ரூ.23 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரமசிவன் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது சுப்புலெட்சுமி மகள், மகனுடன் ஒரு காரில் ஏறி சென்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பரமசிவன் தனது உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி, குழந்தைகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகள், பணம் மற்றும் குழந்தைகளுடன் மாயமான சுப்புலெட்சுமியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X