search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி டிரைவர் பலி

    சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தென்காசி:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சொக்க நாச்சியார் புரத்தை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 38), டிரைவர். இவருக்கு சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியை சேர்ந்த தங்கமாரி என்பவருடன் திருமணமாகியுள்ளது. தங்கமாரி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பழனிசாமி நேற்று செந்தட்டிக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பழனிசாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×