search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தர்மபுரி மாவட்டம் ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், அதே பள்ளியில் படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. மாணவிகளுக்கு கல்வியும், ஒழுக்கமும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள் இத்தகைய ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    ஆசிரியர்கள் இருவரையும் கண்டிக்க வேண்டிய தலைமை ஆசிரியரும் இந்த தீயச்செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் அத்துமீறல் ஒரு மாணவியிடம் மட்டும்தான் அரங்கேற்றப்பட்டிருக்கிறதா? அல்லது வேறு எவரேனும் இவர்களின் மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இரு ஆசிரியர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பாதுகாப்பான சூழலில் அந்த மாணவி தொடர்ந்து கல்வி பயிலவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×