search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பூதப்பாண்டி அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை

    பூதப்பாண்டி அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த கல்லுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் யாசின்(வயது37). ஓட்டல் தொழிலாளி. இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார். மேலும் தனது மகளின் செயினை விற்று மது அருந்தினார்.

    இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த யாசின் சம்பவத்தன்று வீட்டின் அருகில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பூதப்பாண்டி அருகே ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×