
பிரதமரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள நெல்லைக் கண்ணன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த மாநாட்டில் நான் பேசியபோது பிரதமர் மோடி குறித்தும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா குறித்தும் அவதூறாக பேசியதாகக்கூறி பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே “ஜோலியை முடிக்கலியா?” என பேசப்பட்டது. அதன் பொருள் வேலை. அதாவது அரசியலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொணரவில்லையா? எனும் நோக்கிலேயே அவ்வாறு பேசப்பட்டதே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல.

இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நெல்லை கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே வழக்கை ரத்து செய்ய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. இதையடுத்து நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 20-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்