search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதல்- டிரைவர் பலி

    உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த ராமச்சந்திரன். வெளி நாட்டில் வேலைபார்த்த இவர் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்தார்.

    இவரை அழைப்பதற்காக அரியலூர் அருகே உள்ள பள்ளகாவேரி கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் சிரஞ்சீவி (வயது30). என்பவர் சென்னை சென்றார். அங்கு ராமச்சந்திரனை அழைத்து கொண்டு காரில் சிரஞ்சீவி அரியலூருக்கு நேற்று இரவு புறப்பட்டார். இந்த கார் இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே பைபாஸ்ரோடு அஜிஸ்நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது முன்னால் சென்ற லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சிதைந்தது. இந்த விபத்தில் சிரஞ்சீவி சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார். ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தார். அவர் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×