என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது
Byமாலை மலர்9 Jan 2020 4:49 PM GMT (Updated: 9 Jan 2020 4:49 PM GMT)
மன்னார்குடி அருகே பக்தர்கள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பினர்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே உள்ள தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 30). இவர் தனது காரில் அய்யப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு மன்னார்குடிக்கு சென்று கொண்டிருந்தார். கார் மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் என்ற இடத்தில் சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. இதைக்கண்ட ராமச்சந்திரன் உடனே காரை நிறுத்தி அதில் இருந்தவர்களை வெறியேற்றினார். அப்போது கார் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே மன்னார்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. காரில் பயணமான அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றி தப்பினர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X