search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கரூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை

    கரூரில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி செல்வி (வயது 43). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு இருந்துள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். 

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் செல்வியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி இறந்தார். இது குறித்து செல்வியின் மகள் சுப்ரியா கொடுத்த புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×