என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவண்ணாரப்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்9 Jan 2020 9:38 AM GMT (Updated: 9 Jan 2020 9:38 AM GMT)
புதுவண்ணாரப்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ராமு. இவர் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காமினி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ராமுவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. பணிக்கு செல்லாமல் ஓய்வில் இருந்த அவர் கடந்த 2 மாதமாக மீண்டும் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு வந்த ராமு திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காமினி புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ராமுவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த ராமுவின் சொந்த திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் ஆகும். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ராமு. இவர் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காமினி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ராமுவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. பணிக்கு செல்லாமல் ஓய்வில் இருந்த அவர் கடந்த 2 மாதமாக மீண்டும் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு வந்த ராமு திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காமினி புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ராமுவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த ராமுவின் சொந்த திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் ஆகும். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X