என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
Byமாலை மலர்8 Jan 2020 10:36 AM GMT (Updated: 8 Jan 2020 10:36 AM GMT)
கும்பகோணம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் ரோடு பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து மர்ம நபர்கள் விற்பனை செய்து வருவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் சிறப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் அங்கும் இங்கும் சுற்றி வந்தனர். இதையடுத்து அதிரடியாக அந்த பகுதியில் உள்ளே புகுந்து சோதனை செய்தனர்.
அப்போது அங்குள்ள நகராட்சிக்கு சொந்தமான பொது கழிவறையில் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரத்து 675 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறப்பு படை போலீசார் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கும்பகோணம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை கடத்தி வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் ரோடு பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து மர்ம நபர்கள் விற்பனை செய்து வருவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் சிறப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் அங்கும் இங்கும் சுற்றி வந்தனர். இதையடுத்து அதிரடியாக அந்த பகுதியில் உள்ளே புகுந்து சோதனை செய்தனர்.
அப்போது அங்குள்ள நகராட்சிக்கு சொந்தமான பொது கழிவறையில் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரத்து 675 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறப்பு படை போலீசார் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கும்பகோணம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை கடத்தி வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X