search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆன்லைன் நிறுவனம் நடத்தி ரூ. 15 லட்சம் மோசடி செய்தவர் கைது

    கோவை அருகே ஆன்லைன் நிறுவனம் நடத்தி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் போனி தாமஸ் (40). இவர் அலமு நகரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்தார்.

    இங்கு முதலீடு செய்தால் 150 நாட்களில் 3 மடங்கு பணம் தருவதாக கூறினார். இதனை நம்பி அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரூ.1 லட்சம், 2 லட்சம் என பணம் கட்டி உள்ளனர். அவர்களுக்கு வார விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் ரூ. 2 ஆயிரம் வழங்கி உள்ளார்.

    இந்த நிலையில் போனி தாமஸ் தனது நிறுவனத்தை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் அவரிடம் பணம் கட்டிய 10 பேர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் ரூ.15 லட்சம் வரை பணம் கட்டி இருந்தனர். மோசடியில் ஈடுபட்ட போனி தாமசை பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற அவர்கள் போனி தாமசை பிடித்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர் காட்டூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×