search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

    ஆண்டிப்பட்டி அருகே திருமணத்துக்காக கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது24). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இளம்பெண்ணை திருமண ஆசை காட்டி மூணாறு கடத்தி சென்றார்.

    மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். அக்கம் பக்கம் விசாரித்ததில் மாணவியை பாண்டித்துரை கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து ராஜதானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் மூணாறு சென்று 2 பேரையும் மீட்டு சுந்தரராஜபுரத்துக்கு அழைத்து வந்தனர். மாணவியை அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவரை கடத்திய பாண்டித்துரையை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×