என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீன் ஏற்றுமதியால் ரூ.5 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி- அமைச்சர் ஜெயக்குமார்
Byமாலை மலர்8 Jan 2020 8:52 AM GMT (Updated: 8 Jan 2020 8:52 AM GMT)
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் டன் மீன் ஏற்றுமதி செய்யப்படுவதால் ரூ.5 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது நவீன ரக மீன்கள் வளர்ப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 15.08 லட்சம் நவீன ரக மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. 5 லட்சம் டன் மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைக்கிறது. தொடர்ந்து மீன் சாப்பிட்டால் மாரடைப்பு வராது, கண் பார்வை நன்றாக இருக்கும், தோல் வியாதிகள் வராது. எனவே மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இன்றைய இளைஞர்கள் படித்து முடித்த பிறகு அரசு வேலை கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பதை விட மீன் வளர்ப்பது போன்ற சிறு தொழில்களை செய்யலாம். இதற்கு அரசும் மானியங்கள் உள்பட பல்வேறு உதவிகளை செய்கிறது. எனவே இளைஞர்கள் சிறுதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X