என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை
Byமாலை மலர்8 Jan 2020 7:55 AM GMT (Updated: 8 Jan 2020 7:55 AM GMT)
கோவில்பட்டி அருகே திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தச்சுவேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த பங்கஜலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் ராமசாமியின் வீட்டில் கழிப்பிட வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் புதிதாக கட்ட வேண்டும் என்று அவரது மனைவி கூறியுள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பங்கஜலெட்சுமி கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமசாமி தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பங்கஜலெட்சுமி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த அவரது தாய் வீட்டின் கதவு பூட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்தார். பின்னர் அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது பங்கஜலெட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார் பங்கஜலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 5 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தச்சுவேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த பங்கஜலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் ராமசாமியின் வீட்டில் கழிப்பிட வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் புதிதாக கட்ட வேண்டும் என்று அவரது மனைவி கூறியுள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பங்கஜலெட்சுமி கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமசாமி தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பங்கஜலெட்சுமி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த அவரது தாய் வீட்டின் கதவு பூட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்தார். பின்னர் அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது பங்கஜலெட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார் பங்கஜலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 5 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X