search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    கோவையில் வருகிற 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து காங்கிரஸ் பொதுக்கூட்டம்

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவை தேர்நிலை திடல் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
    கோவை:

    கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.எம்.சிம். மனோகரன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் ராஜா மணி, அழகு ஜெயபால், சொக்கம்புதூர் கனகராஜ், நவீன்குமார், சிவாஜி கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவை தேர்நிலை திடல் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னணி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். எனவே இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நன்றி தெரிவித்துக் கொள்வது. வருகிற 11, 12-ம் தேதிகளில் நடக்கும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் காங்கிரஸ் தகுதியுள்ள புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்பதை உள்பட பலரும் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×