என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் - சிறுமி பலி
Byமாலை மலர்7 Jan 2020 9:54 AM GMT (Updated: 7 Jan 2020 9:54 AM GMT)
மதுரையில் மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி, இளம்பெண் பலியாகி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவதால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி, இளம்பெண் பலியாகி உள்ளனர்.
மதுரை ஜீவாநகரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் ஹர்சிதாஸ்ரீ (வயது4). கடந்த சில நாட்களாக சிறுமிக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.
இதனால் சிறுமியை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஹர்சிதாஸ்ரீ பரிதாபமாக இறந்தாள்.
ஆனையூர் ஆபிசர்டவுன் தெருவைச் சேர்ந்தவர் வேணில்தாஸ். இவரது மகள் ஹெலன் லெனோசா (23). இலங்கை அகதியான இவர், கடந்த சில மாதங்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
டாக்டர்களிடம் காண்பித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹெலன் லெனோசாவை சம்பவத்தன்று குடும்பத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி, இளம்பெண் பலியாகி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவதால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி, இளம்பெண் பலியாகி உள்ளனர்.
மதுரை ஜீவாநகரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் ஹர்சிதாஸ்ரீ (வயது4). கடந்த சில நாட்களாக சிறுமிக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.
இதனால் சிறுமியை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஹர்சிதாஸ்ரீ பரிதாபமாக இறந்தாள்.
ஆனையூர் ஆபிசர்டவுன் தெருவைச் சேர்ந்தவர் வேணில்தாஸ். இவரது மகள் ஹெலன் லெனோசா (23). இலங்கை அகதியான இவர், கடந்த சில மாதங்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
டாக்டர்களிடம் காண்பித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹெலன் லெனோசாவை சம்பவத்தன்று குடும்பத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி, இளம்பெண் பலியாகி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X