search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X
    இளம்பெண் மாயம்

    இளம்பெண் மகளுடன் மாயம்- கணவர் போலீசில் புகார்

    இளம்பெண் மகளுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையை சேர்ந்தவர் மோய்ன் இக்பால் (34). இவரது மனைவி லுபானா(27) நேற்று மாலை தனது மகள் சைதாவுடன்(7) திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள செருப்புக் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த மோய்ன் இக்பால் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மனைவி, மகள் கிடைக்கவில்லை. இது குறித்து அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×