என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி அருகே ஆசிரியருக்கு கொலை மிரட்டல்
Byமாலை மலர்7 Jan 2020 8:43 AM GMT (Updated: 7 Jan 2020 8:43 AM GMT)
நாங்குநேரி அருகே ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள தான்தோன்றியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 54). இவர் நெல்லை பழைய பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். சம்பவத்தன்று பாஸ்கர் மூலைக்கரைப்பட்டி பஜாருக்கு செல்வதற்காக தான் தோன்றி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த தெற்கு காரசேரியை சேர்ந்த மந்திரம் மகன் ஊய்காட்டான் பாஸ்கரிடம் ரூ.2000 கேட்டார். அதற்கு பாஸ்கர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஊய்காட்டான் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஊய்காட்டானை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X