search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேனி அருகே வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

    தேனி அருகே வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார்.

    கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கீர்த்தனா கொடுத்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த சம்மனசு மனைவி மேரி (50). இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×