என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூண்டி ஏரிக்கு 102 நாட்களில் 4 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது
Byமாலை மலர்7 Jan 2020 7:01 AM GMT (Updated: 7 Jan 2020 7:01 AM GMT)
102 நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 4.171 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது வினாடிக்கு 3,500 கனஅடி திறக்கப்படுகிறது.
கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28-ந் தேதி முதல் இன்று காலை வரை 102 நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 4.171 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 28.82 அடியாக பதிவானது. 1481 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 480 கனஅடியாகவும், மழை நீர் வினாடிக்கு 171 கனஅடியாகவும் வந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 355 கனஅடியும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு 19 கனஅடியும் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது வினாடிக்கு 3,500 கனஅடி திறக்கப்படுகிறது.
கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28-ந் தேதி முதல் இன்று காலை வரை 102 நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 4.171 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 28.82 அடியாக பதிவானது. 1481 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 480 கனஅடியாகவும், மழை நீர் வினாடிக்கு 171 கனஅடியாகவும் வந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 355 கனஅடியும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு 19 கனஅடியும் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X