என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரவாண்டி அருகே டிரைவரை அரிவாளால் வெட்டி லாரி கடத்தல்
Byமாலை மலர்7 Jan 2020 4:57 AM GMT (Updated: 7 Jan 2020 4:57 AM GMT)
விக்கிரவாண்டி அருகே லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிவிட்டு லாரியை கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி:
மும்பை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சிங் (வயது 45). இவர் ஈச்சர் லாரியில் மும்பையிலிருந்து புதுவைக்கு ஹைட்ராலிக் மெஷின் ஏற்றிக் கொண்டு வந்தார். இன்று அதிகாலை அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கூட்ரோட்டில் சாலையோரமாக லாரியை நிறுத்தினார்.
பின்னர் அவர் லாரியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் லாரியில் ஏறி அங்கு தூங்கிக்கொண்டிருந்த சஞ்சீவிகுமார் சிங் தலையில் அரிவாளால் சரமாரி வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் கூச்சல் போட்டு அலறினார். பின்னர் அவர்கள் சஞ்சீவ்குமார் சிங்கை லாரியில் இருந்து கீழே தூக்கி வீசினர். பின்னர் அவர்கள் லாரியை கடத்தி சென்று விட்டனர்.
தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சஞ்சீவ்குமார் சிங்கை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே டிரைவரை வெட்டிவிட்டு லாரியை கடத்தி சென்ற சம்பவம் விக்கிரவாண்டி போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
லாரி கடத்தப்பட்டது குறித்து ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராதாபுரம் பகுதியில் ரோந்துபணியில் இருந்த போலீசார் கடத்தப்பட்ட லாரியை பின் தொடர்ந்து சென்றனர்.
புதுவை திருக்கனூர் அடுத்த மண்ணாடிப்பட்டு பகுதியில் சென்றபோது போலீசார் பின்தொடர்ந்து வருவதை பார்த்ததும். கடத்தல்காரர்கள் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அதன்பின்பு கடத்தப்பட்ட லாரியை போலீசார் மீட்டனர். தப்பி ஓடிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சிங் (வயது 45). இவர் ஈச்சர் லாரியில் மும்பையிலிருந்து புதுவைக்கு ஹைட்ராலிக் மெஷின் ஏற்றிக் கொண்டு வந்தார். இன்று அதிகாலை அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கூட்ரோட்டில் சாலையோரமாக லாரியை நிறுத்தினார்.
பின்னர் அவர் லாரியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் லாரியில் ஏறி அங்கு தூங்கிக்கொண்டிருந்த சஞ்சீவிகுமார் சிங் தலையில் அரிவாளால் சரமாரி வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் கூச்சல் போட்டு அலறினார். பின்னர் அவர்கள் சஞ்சீவ்குமார் சிங்கை லாரியில் இருந்து கீழே தூக்கி வீசினர். பின்னர் அவர்கள் லாரியை கடத்தி சென்று விட்டனர்.
தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சஞ்சீவ்குமார் சிங்கை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே டிரைவரை வெட்டிவிட்டு லாரியை கடத்தி சென்ற சம்பவம் விக்கிரவாண்டி போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
லாரி கடத்தப்பட்டது குறித்து ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராதாபுரம் பகுதியில் ரோந்துபணியில் இருந்த போலீசார் கடத்தப்பட்ட லாரியை பின் தொடர்ந்து சென்றனர்.
புதுவை திருக்கனூர் அடுத்த மண்ணாடிப்பட்டு பகுதியில் சென்றபோது போலீசார் பின்தொடர்ந்து வருவதை பார்த்ததும். கடத்தல்காரர்கள் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அதன்பின்பு கடத்தப்பட்ட லாரியை போலீசார் மீட்டனர். தப்பி ஓடிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X