என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் ரூ.1 லட்சம் கள்ளநோட்டு சிக்கியது
திருப்பூர்:
திருப்பூர் திருநீலகண்ட வீதியில் உள்ள மோகன் என்பவரது மொட்டைமாடியில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு போனில் ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையிலான போலீசார் மோகன் வீட்டுக்கு சென்றனர். மொட்டைமாடியில் அங்குல அங்குலமாக தேடினர். அப்போது ஒரு பெயிண்ட் டப்பாவில் டர்பன் ஆயில் இருந்தது.
அதனை சோதனை செய்தபோது அதில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதில் இருந்து எடுத்தபோது நோட்டுக்கள் கிழிந்தன. இதனையடுத்து ரூபாய் நோட்டுகளை பத்திரமாக மீட்டனர். மொத்தம் ரூ.1 லட்சம் இருந்தது.
கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டதா? அல்லது ஜெராக்ஸ் எடுக்கப்பட்டதா? என்பது உடனே தெரியவில்லை. டர்பன் ஆயிலில் கள்ளநோட்டுக்களை ஊற வைத்ததால் பயன்படுத்திய ரூபாய் நோட்டுக்கள் போல் தெரிந்தது. இந்த நூதனமுறையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றிருப்பது தெரியவந்தது.
வீட்டு உரிமையாளரிடம் இது குறித்து கேட்டபோது இதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்