என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்6 Jan 2020 10:39 AM GMT (Updated: 6 Jan 2020 10:39 AM GMT)
பெரம்பலூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் தன் குழந்தை மீது மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வடக்களூர் ஊராட்சிக் குட்பட்ட அகரம் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 26). இவரது மனைவி நர்மதா (21) . இவர்களுக்கு திருமணமாகி 2ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் கவுதமன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
சுந்தர்ராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நர்மதா தனது கணவருடன் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த நர்மதா, குழந்தை மீதும் தன் மீதும் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் 2பேர் மீதும் பற்றிய தீயை அணைத்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நர்மதா இறந்தார். மேல் சிகிச்சைக்காக குழந்தை கவுதமனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கவுதமனும் இறந்தான்.
இது குறித்து மங்கள மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வடக்களூர் ஊராட்சிக் குட்பட்ட அகரம் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 26). இவரது மனைவி நர்மதா (21) . இவர்களுக்கு திருமணமாகி 2ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் கவுதமன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
சுந்தர்ராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நர்மதா தனது கணவருடன் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த நர்மதா, குழந்தை மீதும் தன் மீதும் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் 2பேர் மீதும் பற்றிய தீயை அணைத்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நர்மதா இறந்தார். மேல் சிகிச்சைக்காக குழந்தை கவுதமனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கவுதமனும் இறந்தான்.
இது குறித்து மங்கள மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X