search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து (கோப்புப்படம்)
    X
    விபத்து (கோப்புப்படம்)

    பாடாலூர் அருகே கார் மோதி 2 பேர் பலி

    பாடாலூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாடாலூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா மணியங்குறிச்சி கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் குமார் (வயது 42). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் வேல்முருகன் (45) டிரைவர்.

    இவர்கள் இருவரும் பாடாலூர் அருகே ஆலத்தூர்கேட் என்ற இடத்தில் திருச்சி- சென்னை தேசியநெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்னையில் இருந்து சபரிமலை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த குமார், வேல்முருகனின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×