என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குளத்தில் மூழ்கி பலியான பெண்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலெட்சுமி ஆறுதல்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகுபொன்னையா (வயது 38). மினிவேன் டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி இந்திரா (34). இவர்களுக்கு சுமித்ராதேவி (11) என்ற மகளும், மகேந்திரன்(9) என்ற மகனும் உள்ளனர். சுமித்ரா அருகில் உள்ள ராமநாதபுரம் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை இந்திரா தனது மகள் சுமித்ராதேவி மற்றும் தனது மகன் மகேந்திரபிரசாத் ஆகியோருடன் பனையூரில் உள்ள பெரிய கண்மாய்க்கு துணி துவைக்க சென்றதாக கூறப்படுகிறது.
இவர்களுடன் பனையூரை சேர்ந்த முருகானந்தம் மனைவி அனந்தம்மாள் செல்வி (31) என்பவரும் சென்றுள்ளார். கண்மாய்க்கு சென்ற இந்திரா மற்றும் செல்வி துணிகளை துவைக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் கண்மாயின் ஆழமான பகுதிக்குள் சென்ற சுமித்ராதேவி தண்ணீருக்குள் முழ்க ஆரம்பித்தார். அவரின் அபாயக்குரல் கேட்டு கரையில் துவைத்து கொண்டிருந்த இந்திரா தண்ணீருக்கும் பாய்ந்து மகளை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் இந்திராவும் தண்ணீருக்குள் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் காப்பாற்றும் நோக்கில் கரையிலிருந்த செல்வி அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் பரிதாபமாக மூன்று பேரும் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளத்தில் மூழ்கி 3 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அமைச்சர் ராஜலெட்சுமி மற்றும் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவர்களிடம் பேசிய அமைச்சர் ராஜலெட்சுமி, முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்