search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்பு
    X
    பொங்கல் பரிசு தொகுப்பு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 3½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 128 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.41.03 கோடி மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட நியாய விலைக்கடைகளில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்ற விழாக்களில், ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம் வசந்தம் நகர் பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் நடைபெற்ற விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    பரமக்குடி வட்டம், காட்டு பரமக்குடி பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. ஆயிரத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு உள்ளிட்ட பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 558 முழு நேர நியாய விலைக்கடைகளும், 217 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 775 கடைகள் செயல்பட்டு வருகின்றன. 3,63,128 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இந்த பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.41.03 கோடி மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுக்கள் சிரமமின்றி பொங்கல் பரிசினை பெற்று பயனடையும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு எந்தெந்த தேதியில் எந்தெந்த கிராம குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறித்த விவரங்களை கிராம மக்கள் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக தேதி வாரியாக அட்டவணை தயார் செய்து, அதனை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விளம்பர பதாகையாக அமைத்திடவும், தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பினை வழங்கிட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், ராம்கோ கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×