என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் காதல் தொல்லையால் விஷம் குடித்த கல்லூரி மாணவி
Byமாலை மலர்6 Jan 2020 9:45 AM GMT (Updated: 6 Jan 2020 9:45 AM GMT)
திருப்பூரில் காதலிக்க மிரட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயன்றார். இது தொடர்பாக கோவை போராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
கோவையை சேர்ந்த அசோக்குமார் (வயது 29). இவர் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி அங்கு படித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர். இதனால் மாணவி காதலை கைவிட்டார். ஆனால் தொடர்ந்து காதலிக்கும்படி அசோக்குமார் வற்புறுத்தினார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிய வந்ததும் அசோக்குமாரை டிஸ்மிஸ் செய்தது. ஆனாலும் மாணவியிடம் அவர் செல்போனில் பேசி தொந்தரவு கொடுத்தார். ஒரு கட்டத்தில் மாணவி தனது நிலையை தெளிவாக எடுத்துக்கூறினார்.
இதனை கண்டுகொள்ளாத அசோக்குமார் காதலிக்கவில்லை என்றால் நீயும், நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணைய தளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்.
இதனால் அச்சமடைந்த மாணவி நேற்று முன்தினம் பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அசோக்குமாரை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் மாணவியை தாக்கி மிரட்டினார். இதனால் விரக்தியடைந்த மாணவி ஓட்டலை விட்டு வெளியேறி விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாணவியின் தந்தை பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அசோக்குமாரை கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த அசோக்குமார் (வயது 29). இவர் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி அங்கு படித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர். இதனால் மாணவி காதலை கைவிட்டார். ஆனால் தொடர்ந்து காதலிக்கும்படி அசோக்குமார் வற்புறுத்தினார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிய வந்ததும் அசோக்குமாரை டிஸ்மிஸ் செய்தது. ஆனாலும் மாணவியிடம் அவர் செல்போனில் பேசி தொந்தரவு கொடுத்தார். ஒரு கட்டத்தில் மாணவி தனது நிலையை தெளிவாக எடுத்துக்கூறினார்.
இதனை கண்டுகொள்ளாத அசோக்குமார் காதலிக்கவில்லை என்றால் நீயும், நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணைய தளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்.
இதனால் அச்சமடைந்த மாணவி நேற்று முன்தினம் பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அசோக்குமாரை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் மாணவியை தாக்கி மிரட்டினார். இதனால் விரக்தியடைந்த மாணவி ஓட்டலை விட்டு வெளியேறி விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாணவியின் தந்தை பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அசோக்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X