search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர்
    X
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு

    விருதுநகர் மாவட்டத்தில் 2 கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 20 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், 11 யூனியன்களில் உள்ள 200 யூனியன் கவுன்சிலர், 450 கிராம பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

    இதில் வெற்றி பெற்றவர்கள் இன்று அந்தந்த யூனியனில் பதவியேற்றுக்கொண்டனர். அதன்படி 20 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த 13 பேர், தி.மு.க.வைச் சேர்ந்த 7 பேருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இதில் திட்ட அதிகாரி சுரேஷ், மகளிர் திட்ட அதிகாரி தெய்வேந்திரன், மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, இணைச் செயலாளர் ரவி, வக்கீல் சுதீஷ், விருதுநகர் மகளிரணி செயலாளர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் 25 கவுன்சிலர்கள் இன்று வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

    இதேபோல் யூனியன் கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள் அந்தந்த ஒன்றியங்களில் பதவியேற்றுக் கொண்டனர்.
    Next Story
    ×