என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடுங்கையூரில் பெண்ணை ஆட்டோவில் கடத்தி நகை பறிப்பு
Byமாலை மலர்6 Jan 2020 8:45 AM GMT (Updated: 6 Jan 2020 8:45 AM GMT)
கொடுங்கையூரில் பெண்களே கும்பலாக ஆட்டோவில் வந்து நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராயபுரம்:
கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி பஷீரா பானு. நேற்று இரவு இவர் அருகில் உள்ள டிபன் கடைக்கு நடந்து சென்றார்.
அப்போது சாலை ஓரத்தில் நின்ற மூதாட்டி ஒருவர் பஷீரா பானுவிடம் ரோட்டை கடந்துவிடும்படி கேட்டார். இதையடுத்து மூதாட்டியை பஷீரா பானு அழைத்துச்சென்றார்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ அருகே சென்றபோது மூதாட்டி திடீரென பஷீரா பானுவை வண்டிக்குள் தள்ளிவிட்டார். ஆட்டோவில் இருந்த 4 பெண்களும் பஷீரா பானுவை கத்திமுனையில் மிரட்டி வண்டிக்குள் ஏற்றினர். மூதாட்டியும் அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டார்.
எம்.கே.பி.நகர் அருகே ஆட்டோ சென்றபோது பஷீராபானு அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்தனர்.
பின்னர் அவரை இருளான பகுதியில் இறக்கிவிட்டு ஆட்டோவில் இருந்த பெண்கள் தப்பி சென்றுவிட்டனர். ஆட்டோவை ஓட்டியதும் பெண் ஆவார்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்களே கும்பலாக ஆட்டோவில் வந்து நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி பஷீரா பானு. நேற்று இரவு இவர் அருகில் உள்ள டிபன் கடைக்கு நடந்து சென்றார்.
அப்போது சாலை ஓரத்தில் நின்ற மூதாட்டி ஒருவர் பஷீரா பானுவிடம் ரோட்டை கடந்துவிடும்படி கேட்டார். இதையடுத்து மூதாட்டியை பஷீரா பானு அழைத்துச்சென்றார்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ அருகே சென்றபோது மூதாட்டி திடீரென பஷீரா பானுவை வண்டிக்குள் தள்ளிவிட்டார். ஆட்டோவில் இருந்த 4 பெண்களும் பஷீரா பானுவை கத்திமுனையில் மிரட்டி வண்டிக்குள் ஏற்றினர். மூதாட்டியும் அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டார்.
எம்.கே.பி.நகர் அருகே ஆட்டோ சென்றபோது பஷீராபானு அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்தனர்.
பின்னர் அவரை இருளான பகுதியில் இறக்கிவிட்டு ஆட்டோவில் இருந்த பெண்கள் தப்பி சென்றுவிட்டனர். ஆட்டோவை ஓட்டியதும் பெண் ஆவார்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்களே கும்பலாக ஆட்டோவில் வந்து நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X