என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உடன்குடியில் எலெக்ட்ரிக்கல் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள கொட்டங்காட்டை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல சங்க தலைவராக உள்ளார். இவரது மகன் பிரசாந்த் (வயது 35). இவர் உடன்குடி பேருந்துநிலையத்தில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். பிரசாந்த் நேற்றுஇரவு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார்.
இந்நிலையில் இன்று காலை அவர் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமரா உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் கேமிரா பதிவுகள், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், சந்திரசேகர் மற்றும் பிரசாந்தின் செக்புக் மற்றும் கடை சம்பந்தமான ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பின்னர் பிரசாந்த் குலசேகரபட்டிணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்