என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் யூனியனில் அதிமுக பாட்டு போட்டதால் திமுக.வினர் பதவி ஏற்க மறுப்பு
திருமங்கலம்:
திருமங்கலம் யூனியனில் 16 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. சார்பில் 12 பேரும், தி.மு.க. சார்பில் 3 பேரும் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்டவரும் வெற்றி பெற்றார்.
இன்று காலை அனைவரும் பதவி ஏற்பதற்காக ஒன்றிய அலுவலகம் வந்தனர். தேர்தல் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான உதயகுமார் புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் பதவி ஏற்று முடிந்ததும் தி.மு.க. உறுப்பினர்கள் பதவி ஏற்க தயாரானார்கள். அப்போது அ.தி.மு.க. பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேர்தல் அலுவலர் உதயகுமாரிடம் முறையிட்ட அவர்கள் பதவி ஏற்பை புறக்கணித்து வெளியேறினர். யூனியன் அலுவலக வாசலில் அமர்ந்து கோஷமிட்ட அவர்கள் 11-ந்தேதி பதவி ஏற்றுக்கொள்வதாக கூறி சென்று விட்டனர்.
இதனால் திருமங்கலம் யூனியன் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்