search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கிரு‌‌ஷ்ணகிரியில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கிய வங்கதேச தம்பதி உள்பட 3 பேர் கைது

    பாஸ்போர்ட், விசா இல்லாமல் கிரு‌‌ஷ்ணகிரியில் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிரு‌‌ஷ்ணகிரி:

    கிரு‌‌ஷ்ணகிரி தர்கா கே.ஏ.நகர் வெங்கடாபுரம் ஊராட்சி பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த கணவன் - மனைவி உள்பட 3 பேர் சட்டத்திற்கு புறம்பாக பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கி இருப்பதாக கிரு‌‌ஷ்ணகிரி கொத்தபேட்டா கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கிரு‌‌ஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அதில் வங்க தேசத்தை சேர்ந்த இக்பால்முல்லா (வயது 34), தஸ்லீமா (25), லக்கி (19) ஆகியோர் தங்கி இருந்தது தெரிய வந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இக்பால் முல்லாவும், தஸ்லீமாவும் கணவன் - மனைவி ஆவார்கள். லக்கி இக்பால் முல்லாவின் நண்பர் ஆவார். இக்பால் முல்லா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு வந்துள்ளார். அங்கிருந்து சென்னைக்கு தனது மனைவி தஸ்லீமா மற்றும் 2 பெண் குழந்தைகள் தொன்னிமுல்லா (3), முன்னி முல்லா (1½) மற்றும் நண்பர் லக்கியுடன் சென்று கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் இக்பால் முல்லாவின் நண்பரான கொல்கத்தாவை சேர்ந்த இம்ரான் என்பவர் இக்பால் முல்லாவிடம் கிரு‌‌ஷ்ணகிரியில் தங்குமாறும், தான் மருத்துவ செலவுக்காக பணம் அனுப்புவதாகவும் கூறியுள்ளார். அதன்படி இக்பால் முல்லா தனது மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர் லக்கி ஆகியோருடன் கிரு‌‌ஷ்ணகிரியில் தங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் அவர்கள் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இக்பால் முல்லா, அவரது மனைவி தஸ்லீமா, லக்கி ஆகிய 3 பேரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இக்பால் முல்லா, தஸ்லீமாவின் குழந்தைகளும் அவர்களுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×