search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் வி‌ஷம் குடித்து விவசாயி பலி

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 38 ). இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மிகுந்த மன வேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை வீட்டில் இருந்ததை எடுத்து குடித்துள்ளார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அன்பழகன் இறந்தார். இதுகுறித்து அவரது தாய் சுசீலா அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×