search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெரியகுளம் அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

    பெரியகுளம் அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துராஜ் மகள் வனிதா (வயது16). இவர் அழகர்சாமிபுரம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று முத்துராஜ் வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வனிதா சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்தார். இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    தேனி மாவட்டம் கோம்பை அருகில் உள்ள மேலசிந்தலைச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது மனைவி ராகினி கோபித்துக்கொண்டு கேரளாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த முருகேசன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராகினி கொடுத்த புகாரின் பேரில் கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×