என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி மேலாளர் வீட்டில் 1¼ கிலோ வெள்ளி திருட்டு- நர்சு கைது
Byமாலை மலர்4 Jan 2020 9:58 AM GMT (Updated: 4 Jan 2020 9:58 AM GMT)
கோவையில் வங்கி மேலாளர் வீட்டில் 1¼ கிலோ வெள்ளி மற்றும் 12 கிராம் தங்க நகையை திருடிய நர்சை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 87). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவரது மனைவி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து விஸ்வநாதன் மனைவியை கவனித்து கொள்வதற்காக ஹோம் நர்சாக ஒண்டிப்புதூரை சேர்ந்த தனலட்சுமி(35) என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்தார். அவர் விஸ்வநாதனின் மனைவியை கவனித்து வந்தார். சம்பவத்தன்று விஸ்வநாதன் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 87). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவரது மனைவி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து விஸ்வநாதன் மனைவியை கவனித்து கொள்வதற்காக ஹோம் நர்சாக ஒண்டிப்புதூரை சேர்ந்த தனலட்சுமி(35) என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்தார். அவர் விஸ்வநாதனின் மனைவியை கவனித்து வந்தார். சம்பவத்தன்று விஸ்வநாதன் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார்.
அப்போது அதில் வைத்திருந்த 1¼ கிலோ வெள்ளி மற்றும் 12 கிராம் தங்க நகை, கம்மல் உள்ளிட்டவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் மனைவியிடம் கேட்டார். அவரும் தெரியவில்லை என்றார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த நர்சு தனலட்சுமி திடீரென வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த விஸ்வநாதன் இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் நகை மற்றும் வெள்ளியை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X