search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டு
    X
    நகை திருட்டு

    வங்கி மேலாளர் வீட்டில் 1¼ கிலோ வெள்ளி திருட்டு- நர்சு கைது

    கோவையில் வங்கி மேலாளர் வீட்டில் 1¼ கிலோ வெள்ளி மற்றும் 12 கிராம் தங்க நகையை திருடிய நர்சை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 87). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவரது மனைவி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இதையடுத்து விஸ்வநாதன் மனைவியை கவனித்து கொள்வதற்காக ஹோம் நர்சாக ஒண்டிப்புதூரை சேர்ந்த தனலட்சுமி(35) என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்தார். அவர் விஸ்வநாதனின் மனைவியை கவனித்து வந்தார். சம்பவத்தன்று விஸ்வநாதன் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார்.

    அப்போது அதில் வைத்திருந்த 1¼ கிலோ வெள்ளி மற்றும் 12 கிராம் தங்க நகை, கம்மல் உள்ளிட்டவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் மனைவியிடம் கேட்டார். அவரும் தெரியவில்லை என்றார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த நர்சு தனலட்சுமி திடீரென வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த விஸ்வநாதன் இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் நகை மற்றும் வெள்ளியை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×