என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்4 Jan 2020 9:51 AM GMT (Updated: 4 Jan 2020 9:53 AM GMT)
கோவையில் விடுதியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் விஜயசேகர். டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கமலேஷ்(வயது 21).
இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
நேற்று காலை இவரது நண்பர்கள் கல்லூரிக்கு கிளம்பினர். ஆனால் கமலேஷ் அறையிலேயே இருந்தார். இதை பார்த்த நண்பர்கள் நேரமாகி விட்டது கல்லூரிக்கு வா என்றனர். ஆனால் அவர் நான் வரவில்லை நீங்கள் செல்லுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து நண்பர்கள் வகுப்புக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கமலேசுடன் தங்கி இருந்த மாணவர்கள் இடைவேளையின் போது அறைக்கு வந்தனர். அறையை திறந்து பார்த்தபோது கமலேஷ் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து கமலேசை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கமலேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் விஜயசேகர். டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கமலேஷ்(வயது 21).
இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
நேற்று காலை இவரது நண்பர்கள் கல்லூரிக்கு கிளம்பினர். ஆனால் கமலேஷ் அறையிலேயே இருந்தார். இதை பார்த்த நண்பர்கள் நேரமாகி விட்டது கல்லூரிக்கு வா என்றனர். ஆனால் அவர் நான் வரவில்லை நீங்கள் செல்லுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து நண்பர்கள் வகுப்புக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கமலேசுடன் தங்கி இருந்த மாணவர்கள் இடைவேளையின் போது அறைக்கு வந்தனர். அறையை திறந்து பார்த்தபோது கமலேஷ் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து கமலேசை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கமலேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X