search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து
    X
    தீவிபத்து

    கபிஸ்தலம் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

    கபிஸ்தலம் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள வட சருக்கை கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி மனைவி பாப்பம்மாள் (வயது 82) விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள அடுப்பில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக இவரது சேலையில் தீப்பிடித்ததில் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

    படுகாயமடைந்த விவசாயி பாப்பம்மாளை உடன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×