search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எச்.பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி
    X
    பி.எச்.பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி

    பி.எச்.பாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

    சென்னையில் இன்று காலமான பி.எச். பாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
    சென்னை:

    முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் (வயது 74), உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை போரூர்  ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல், சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பி.எச்.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பி.எச்.பாண்டியன் தொடர்பான நினைவுகளை பகிர்ந்தார். 

    சென்னை அண்ணாநகர் வீட்டில் பி.எச்.பாண்டியன் உடல்

    ‘மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த முறையில் பணியாற்றியவர். சட்டப்பேரவை தலைவராக இருந்து தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். அவரது இழப்பு அதிமுகவுக்கு பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார் முதலமைச்சர்.

    மேலும் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் நேரில் சென்று பி.எச்.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    Next Story
    ×