என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே 2 குழந்தைகளின் தாய் திடீர் மாயம்
Byமாலை மலர்3 Jan 2020 1:58 PM GMT (Updated: 3 Jan 2020 1:58 PM GMT)
ஒரத்தநாடு அருகே தனது தாயாரை பார்க்க சென்ற 2 குழந்தைகளின் தாய் திடீரென மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே அரண்மனை கடைத்தெரு மெயின் ரோட்டில் வசிப்பவர் கண்ணை கண்ணன்(வயது54). இவர் கடைத்தெருவில் ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு விக்னேஸ்வரி(9), விக்னேஸ்வரன்(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சித்ரா காவராப்பட்டில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக கூறி சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் கண்ணன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சித்ராவுக்கும், ஒரத்தநாடு டவுன் அண்ணாநகரை சேர்ந்த டிரைவர் வினோத் என்பவருக்கும் பழக்கம் இருந்து வருவது தெரியவந்துள்ளது.
சித்ராவை வினோத் எங்காவது அழைத்து சென்று தலைமறைவாக வைத்துள்ளாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வினோத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X